website stat


 

 

 

விபச்சாரம் ஓர் உலகப்பார்வை

முகவை ரபீக்

விபச்சாரம்என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக இப்பொழுது பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம் என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் விபச்சாரம்என்றே கூறலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா, கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள் சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் விபச்சாரம் வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியோகமாக விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்வர்கள் போகமுடியாது. பண்டைக்காலந்தொட்டு வழங்கி வரும் அநேக தீய விஷயங்களில் விபச்சாரமும் ஒன்றாகும். இந்த விபச்சாரம்என்னும் கொடிய வழக்கம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதையும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம். இன்றும் பம்பாய், கொல்கத்தா, ஹைத்ராபாத் போன்ற பல நகரங்களில் தெரிந்தே விபச்சாரம் நடக்கிறது. ஆடு மாடுகளைப் போல் பெண்களை விற்பனை செய்யும் இழிநிலை வட மாநிலங்கள் சிலவற்றில் நிலவி வருகின்றன. ராஜஸ்தான் மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்தில் இந்த கொடுமையான செயல் நடைமுறையில் இருக்கிறது. இந்த கொடூர முறை நந்தா பிராட்டா என்று அழைக்கப் படுகிறது. மனைவியிடம் இல்லற வாழ்வில் திருப்தி அடையாத ஆண்கள் பெண்களை விற்பனை செய்யும் தரகர்களை அணுகி தங்களுக்கு தேவையான பெண்களை விலைக் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். அவள்  கசந்து போனதும் மீண்டும் அவளை தரகரிடம் விற்றுவிட்டு வேறு பெண்ணை வாங்கிக் கொள்கிறார்கள்.சந்தாபாய் என்ற பெண்ணை அவளது கணவன் விற்பனை செய்து விட்டு வேறொரு பெண்ணை விலைக்கு வாங்க விரும்பினான். தான் விற்பனைப் பொருளாக கருதப்படுவதை சாந்தாபாய் வன்மையாக கண்டித்தாள் உடன்பட மறுத்தாள். தன் விருப்பத்துக்கு கட்டுப்படாத மனைவியை சூனியக்காரி என்று கணவன் கூறி ஊர் முழுவதும் செய்தியை பரப்பினான். இந்த செய்தி காட்டுத் தீப்போல் பரவி கடைசியில் சாந்தா பாயின் உயிரையும் குடித்தது. கிராமத்தின் கிணற்றில் அவள் பிணம் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலை செய்துக கொண்டால் என்று வழக்கு முடிக்கப் பட்டு விட்டது. இன்றைய உலகம் நாகரீகம் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் சமம் என்ற போலிச் சித்தாந்தத்தால் அநாகரீகத்தின் உச்சிக்கே சென்று விட்டது. இவை எப்படிப்பட்ட மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை சில கணக்கெடுப்புகள் தெளிவாக விவரிக்கின்றது. ஆந்திரமாநிலத்தில் சுமார் 16000 தேவதாசிகள் இருக்கிறார்கள் என்றும், கர்நாடகாவில் சுமார் 22000  தேவதாசிகள் இருக்கிறார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "World Health Organisation" என்ற உலக ஆரோக்கிய கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் 15 சதம் இந்த தேவதாசிகள் என்ற மதத்தின் பெயரால் விபச்சாரத்தில் கொண்டுவரப்பட்ட பெண்களார். கர்நாடக மாநிலம் - ஆந்திர மாநிலம் இவற்றில் எல்லை பகுதியில் நடக்கும விபச்சாரத்தில் 70 சதம் முதல் 80 சதம் வரை இந்த தேவதாசிகளே ஈடுபடுகின்றனர் எனத் தெரிய வந்திருக்கின்றது. 2000 ஆண்டில் 20 லட்சம் விபச்சாரிகள் இந்தியாவில் இருப்பதாக ஐ.நா அமைப்பு கூறியுள்ளது. அதே ஆண்டு 14 ஆயிரம் பெண்கள் இந்தியாவில் கற்பழிக்கப் பட்டுள்ளதாக நாடாள மன்றத்தில் அறிவித்துள்ளனர். உலக மக்கள் அனைவரும் வியாபார நிமித்தமாக இந்தியாவரும் வேளை உலக வியாதிகளையும் இங்கு கொண்டுவந்து கொடுத்து விட்டுப்போகிறார்கள். இன்று இந்தியாவில் 3. 5 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. செக்ஸ் தொழிலாளர்கள் நடத்தும் வங்கியின் சாதனை மே 05, 2007 கொல்கத்தாவில் விபச்சாரப் பெண்களால் நடத்தப்படும் ஒரு வங்கி ரூ. 9 கோடி அளவுக்கு முதலீடுகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வங்கியை முழுக்க முழுக்க விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே தொடங்கி நிர்வகித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் 8500 உறுப்பினர்கள் இதில் சேர்ந்துள்ளனர். இதன் முதலீடு ரூ. 9 கோடியைத் தொட்டு சாதனை படைத்துள்ளது. தொழிலாளர்களின் ஆட்சி என்று சொல்லப்படும் கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்கு வங்கத்தில்தான் இந்தக் கொடுமை நடக்கிறது! சில மாதங்களுக்கு முன் பத்திரிகையாளர் ஞாநி அவர்கள் ஒரு விலைமகளிரிடம் கேட்ட கேள்வி "இந்த விபச்சாரம் இழிவாக தோன்றவில்லையா?". அதற்கு அந்த பெண் "அனைவரும் எதாவது ஒரு உடலுறுப்பை பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறார்கள். நாங்களும் மற்றவர் கண்களுக்கு தெரியாத சில உறுப்புகளை பயன்படுத்தி சம்பாதிக்கிறோம்" என்றாராம். பாலியல் சுகத்திற்காகவும் பணத்திற்காகவும் கண்டவனுக்கும் முந்தானை விரிக்கும் விபச்சாரிகளின் செயலை உழைப்பு என குறிப்பிடுவது சரியா? காடு-கழனிகளில் அரைவயிற்றுடன் ஒருநாளின் மூன்றில் இரண்டு பங்கு கால்கடுக்க, உடல்நோக உழைக்கும் விவசாயினுடைய உழைப்பும் இதுவும் ஒன்றா? விபச்சாரத்தில் ஈட்டும் பணத்தை சேமிக்க வேண்டுமாம்! நாடு உருப்படுமா? அதேபோல் 'குடிமகன்'களுக்கும் வங்கி லோன் வழங்கி அரசே உதவலாமே! வங்கி வழங்கும் கடன்தொகையால் ஆணுறையை போதுமான அளவுக்கு இருப்பு வைத்துக் கொள்ள முடியுமாம். இந்த கடனை அவலமான இந்த தொழிலிலிருந்து வெளிப்பட்டு வேறு தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு கொடுக்கலாமே! இத்தகைய அவலங்களைக் கண்டுகொள்ளாமல் போனால் வெகுசீக்கிரம் அன்னை பாரதம் என்று அறியப்படும் நம்நாடு வேறு பெயரில் அறியப்படும் அபாயம் இருக்கிறது.

புள்ளி விபரம்: ஆணும் பெண்ணும் சமம் என்ற வறட்டுச் சித்தாந்தத்தால் யாரும் யாருக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டிய அவசியமில்லை என்ற அடிப்படையில் யாரும் யாருடனும் வாழ்ந்து கொள்ளலாம் என்ற ரீதியில் செயல்பட்டு வருகின்றனர். திருமணம் செய்தால் ஒருவருக்கு கட்டுப்பட்டு வாழ நேரிடும் என்ற எண்ணமே இந்தச் சீரழிவிற்குக் காரணமாகும். 1999 ஆம் ஆண்டில் மட்டும் 43818 விவாகரத்துகள் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக 1 லட்சத்து 46 ஆயிரத்து 914 குழந்தைகள் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவருடன் மட்டும் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விவாகரத்தின் காரணமாக விவாகரத்து பெற்றவர்களின் குழந்தைகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மோசமான விளைவுகளை சந்திப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாய ரீதியாகவும் பல இன்னல்களை சந்திக்கின்றனர். இதனால் ஒழுக்கமுள்ள கட்டுப்பாடுள்ள எதிர்காலச் சமுதாயம் உருவாவது பாதிக்கப்பட்டுள்ளது. தாய் தந்தை அரவணைப்பில் வாழும் குழந்தைகளே எதிர்காலத்தில் சிறந்த சமுதாயத்தவர்களாக உருவாக முடியும்! என்று பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி இங்கிலாந்தில் திருமணம் செய்து கொள்ளும் ஆயிரம் பேரில் 130 பேர் விவாகரத்து செய்கின்றனர். 1999 ஆம் ஆண்டின்படி இது 12.70 சதவீதமாகும். அமெரிக்கப் பொருளாதார அறிஞர்கள் இருவர் சுவைஞர்களும் கவனத்தில் கொள்ளத்தக்க ஒர் ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அமெரிக்க இளசுகளின் பாலியல் நடத்தைகளே அவர்களது ஆய்வின் மையம். மது அருந்திவிட்டு காரோட்டுவது போலவோ அல்லது மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருப்பது போலவோ அல்ல மது அருந்தி விட்டு உடலுறவில் ஈடுபடுவது. அதனால் பள்ளி கல்லூரிப் பருவத்திலேயே மாணவிகள் தாய்மார்களாகி விடுகிறார்கள். பல சமயங்களில் கொடிய பால்வினை நோய்க்கு ஆளாக நேரிடுகிறது என்று எச்சரிக்கிறார்கள் அந்த ஆய்வறிஞர்கள்.

      கைஸர் பேமிலி பௌன்டேஷன் என்ற அமைப்பு 13 முதல் 24 வயதுக்குள் பட்ட அமெரிக்க இளசுகளிடையே ஓர் ஆய்வு நடத்தியது. போதை மருந்து மற்றும் மதுபழக்கத்தால் உந்தப் பட்டு நாங்கள் உடலுறவிலும் ஈடுபட்டோம் என்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர்களில் 81 சதவிகித இளசுகள் பகிரங்கமாக ஒப்புக் கொண்எருக்கிறார்கள். அமெரிக்காவில் கூட உடலுறவுகளால் பாதிக்கப்பட்டுத் தவிக்கும் டீன் ஏஜ் கர்ப்பவதிகள் எத்தனை பேர் தெரியுமா? 10 லட்சம். ஆண்டுதோறும்.

      பாடாம் தீவு இந்தோனீசியாவிற்குச் சொந்தமானது. சிங்கப்பூரிலிருந்து அரை மணியில் படகில் சென்று விடலாம். இங்கு வரும் சுற்றுப்பயணிகளில் 80% சிங்கப்பூரர்கள். படாமின் மிக மலிவான பொழுதுபோக்குகளும் விபச்சாரமும் நைட் கிளப் பிசின ஸும் சிங்கப்பூரர்களுக்குக் கவர்ச்சிகரமானது. இங்கு புள்ளி விவரப்படி 9000 இந்தோனீசியப் பெண்கள் அதாவது பாலியல் தொழிலாளிகள் உள்ளனர். ஆனால் உண்மையில் 20000 பேர் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.  இவர்களில் 30% பெண்கள் 14- 16 வயதானவர்கள். சிலர் பருவமடையாத பெண்கள். சிங்கப்பூரர்களில்  கிட்டத்தட்ட 3000 பேர் கேளிக்கைக்காக இங்கு மாதந்தோறும் செல்கின்றனர். இப்பெண்கள் குறிப்பாக சிறுமிகள் விபச்சாரத்தொழிலில் அதிக விலைப் போகின்றனர். சில விவரம் தெரிந்த பெண்கள் உணவகங்கள் பார்களில் வேலைபார்க்க அழைத்து வரப்பட்டு பின் ஏமாற்றப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால்  ஆசிய நாடுகளில் பாலியல் தொழில் இன்று பெரும் வருவாய் ஈட்டும் தொழிலாக இருக்கிறது என்பது உண்மை. குறிப்பாக, தாய்லாந்தும், இந்தோனீசியாவும், சீனாவும் "Sex Sector"  என்பதை தனி பொருளியலாக ஆக்கிக் கொண்டது ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.

ஒரு மாணவியின் அறிக்கை: பம்பாய் மாநகரம்! அதிலிருக்கும் புகழ்மிக்க கல்லூரி பம்பாய் தேசியக் கல்லூரி. இதில் சபாநடவார் என்றnhரு மாணவி. முனதைப் பற்றிப் படிக்கம் பாடத்தைப் படிப்பவர். பட்டப்படிப்பை முடித்து விட்டார். முதுநிலை பட்டப் படிப்பு மாணவியானார். அந்த முதநிலை பட்டப் படிப்பின் இறுதியில் ஏதேனும் ஒரு தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தி அவர் அறிக்கை தர வேண்டும். இந்த மாணவி ஆய்வுக்காக எடுத்துக் கொண்டது தன்னோடு படிக்கம் சக மாணவிகளின் நடவடிக்கைகள். கள ஆய்வில் அவர் எடுத்து கொண்டவை அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்திற்று. அவர் தன்னோடு பயின்ற சக மாணவிகள் பலர் பணத்திற்காக தங்கள் இளமையை  விற்பனை செய்கின்றார்கள் என்பதை அறிந்தார். இது ஏன்? என ஆராய்ந்தார். அப்போது தான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

            இந்த மாணவிகள் மட்டுமல்லாமல் பல குடும்பப் பெண்களும் இதே போல் அமங்கலமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்ற செய்தி தெரிய வந்தது. இந்தப் பெண்கள் படித்தவர்கள் அறிவுடையவர்கள். அதிர்ந்தார் ஆராய்ச்சி மாணவி சபாநட்வார். ஆனாலும் தொடர்ந்து தன் ஆராய்ச்சியை நடத்திய அவர் இப்படிச் சொன்னார்: திருமணமான பெண்கள் தங்கள் உடலை விற்பனை செய்கின்றார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது பணத்திற்காகவும் தங்கள் சுகத்திற்காகவுமே. உண்மையைச் சொல்வதானால் சில கணவன்களே தங்கள் மனைவியை இப்படிச் செய்யச் சொல்லி இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் நல்ல வசதியோடு வாழ்பவர்கள் மேல்மட்டத்துக் குடும்பப் பெண்கள். இதில் ஈடுபடும் கல்லூரி மாணவிகள் பேரும் புகழுமிக்க கல்லூரிகளில் படிப்பவர்கள். பெரிய இடத்துப் பெண்கள். நான் எடுத்துக் கொண்ட இடங்கள் லோகண்ட் வாலா, ஜுஹூ, நரிமண் பாய்ண்ட், பீச்கேண்டி போன்ற மேட்டுக்குடி மக்கள் வாழும் பகுதிகள் தாம்.( Savvy Aug, 2001). எய்ட்ஸ் போன்ற ஆட்கொல்லி நோய்கள் தங்களுக்கு வந்து விடும் என அஞ்சுகின்றார்களா என்றொரு கேள்வி. இந்தக் கேள்விக்கு இப்படிப் பதில் வந்திருக்கின்றது. நாங்கள் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்போதைய சுகம் தான் முக்கியம். எதிர் வரும் நாள்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. இப்போது நாங்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இந்தப் பதிலால் அதிர்ந்து போனார் சபா நட்வார். அவர் தன் ஆராய்ச்சியைத் இப்படி வெளிப்படுத்துகின்றார். திருமணமான பெண்கள் இதில் ஈடுபடுவது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்திற்று. அவர்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றன ஆனால் அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அவர்கள் வீட்டிலேயே இது நடைபெறுகின்றது.

            அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All India Institute of Medical Science) என்றொரு நிறுவனம் நமது தலைநகர் டெல்லியில் இயங்கி வருகின்றது. இந்த ஆராய்ச்சி நிறுவனம் இந்த ஆய்வை இந்த மாணவியிடமிருந்து ஏற்றுக் கொண்டுள்ளது. பாராட்டி பதக்கமும் வழங்கியிருக்கின்றது. இப்படி எல்லோரையும் அதிர வைத்த இந்த ஆய்வு பல உண்மைகளைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டியிருக்கின்றது. உண்மையைச் சொன்னால் இந்தப் பெண்களுக்கு ஏன் வாழ்கின்றோம் என்ற வினாவுக்கு விடை கிடைக்கவில்லை. அதனால் எதிர்வரும் நாட்களைப் பற்றி எந்தக் கவலையுமில்லை. இந்த உலகில் இப்போது சுகமாக இருக்க வேண்டும் என்பதே இலட்சியம்! இவர்களுக்கு மட்டுமல்ல பெரும்பாலான மனிதர்களுக்கு ஏன் வாழ்கின்றோம் இந்த வாழ்க்ககையின் முடிவென்ன என்ற கேள்விகளுக்க விடை தெரியவில்லை. இதனால் தான் எப்படி வாழ வேண்டும் எனத் தெரியாமல் தங்களை அழிக்கும் கொடிய வழிமுறை ஒன்றை எந்தச் சலனமுமில்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்படி மனிதன் தறிகெட்டு நெறிகெட்டு தன்னைத் தானே அழித்துக் கொள்பவன் என்பதனால் தான் மனிதனைப் படைத்த இறைவன் அவன் இந்த உலகில் ஏன் வாழ்கின்றான் அவன் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் வாழ்வின் முடிவு மறுமை என்ற இறப்பிற்குப் பின்னால் வரும் வாழ்க்கை இவற்றைப் பற்றி தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி  இருக்கின்றான்

சமூக அவலங்களில் சில:  இன்று தமிழகத்தில் விபச்சாரம் செய்பவர்களை காவல்துறை பிடிப்பது தினமும் என்று ஆகிவிட்டது. இப்படி நடக்கும் அவலங்களில் சிலவற்றை உங்கள் கவனத்திற்கு தருகிறேன். சென்னை:ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அண்ணா நகர் சாந்தி காலனியில் நரம்பியல் வர்மா வைத்திய நிலையம் என்ற பெயரில் கிளினிக் ஆரம்பித்தார் வாமணன். அங்கு நரம்பியல் சிகிச்சை மற்றும் மசாஜ் மையத்தையும் அவர் நடத்தி வந்தார்.மசாஜ் செய்து கொள்வதற்காக வந்த ஆண்களைக் கவருவதற்காக பெண்களை மசாஜ் செய்ய பணியில் அமர்த்தினார். பெண்களிடம் மசாஜ் செய்து கொள்ள கூடுதல் கட்டணம் வசூலித்தார்.பெண்களிடம் மசாஜ் செய்து கொள்ள ஏராளமான ஆண்கள் வர ஆரம்பித்த நிலையில் தனது கிளினிக்கிலேயே 3 தனித்தனி படுக்கை அறைகளை ரெடி செய்தார். அங்கு வைத்து விபச்சாரத் தொழிலை ஆரம்பித்தார்.இந்தத் தகவல் போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து மசாஜ் செய்து கொள்ள வந்தவர்கள் போல சாதாரண உடையில் போலீஸார் அங்கு சென்றனர். அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியாகத் தெரிய வந்தது.இதையடுத்து வாமணன், மசாஜ் செய்யும் பணியிலும், விபச்சாரத்திலும் ஈடுபடுத்தப்பட்ட பானுப்பிரியா, கற்பகம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், புரோக்கர்கள் மனோகரன், சசிக்குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். (தினத்தந்தி)

            மங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து விபச்சாரம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள பல் மருத்துவ மாணவியை போலீஸார் கைது செய்தனர். அவரோடு துணை நடிகை ஒருவரும் விபச்சாரம் செய்தபோது கையும் களவுமாக பிடிபட்டார். சென்னையில் விபச்சாரத் தடுப்புப் போலீஸார் திடீரென அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.விருகம்பாக்கம் கம்பர் தெருவில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் விபச்சாரம் மற்றும் ஆபாசப் படம் பிடிப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் படை அங்கு விரைந்தது.குறிப்பிட்ட வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியபோது அங்கு சுனிதா மற்றும் சாந்தி ஆகிய இரு பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இவர்களில் சுனிதா பெங்களூரைச் சேர்ந்தவர். கர்நாடக மாநிலம் மணிப்பாலில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வருகிறார். தற்போது ஹவுஸ் சர்ஜனாக உள்ள அவர் மாதம் ஒருமுறை சென்னைக்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபடுவாராம். பின்னர் மணிப்பால் சென்று விடுவாராம். ஆடம்பரமாக செலவழிக்க பணம் தேவைப்பட்டதால் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக போலீஸாரிடம் சுனிதா தெரிவித்தார்.தற்போது போலீஸில் பிடிபட்டு விட்டதால், இனிமேல் விபச்சாரத்தில் ஈடுபட மாட்டேன் என்று கண்ணீர் மல்க போலீஸாரிடம் தெரிவித்தார் சுனிதா. போலீஸாரிடம் சுனிதா பிடிபட்டபோது அவருடன் மயிலாப்பூரைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் உல்லாசமாக இருந்தார். அவர் ஒரு தொழிலதிபராம். சுனிதாவிடம் சந்தோஷமாக இருப்பதற்காக 5,000 ரூபாய் பணம் கொடுத்திருந்தாராம் ரங்கராஜன்.சுனிதாவுடன் இருந்த பெண்ணான சாந்தி துணை நடிகை ஆவார். இவருக்கு கல்யாணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். சினிமாவில் சரியான சம்பளம் கிடைக்காததால் சைடில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.கணவருக்கு தான் செய்யும் விபச்சாரத் தொழில் தெரியாது என்றும் தயவு செய்து சொல்லி விடாதீர்கள் என்றும் அவர் போலீஸாரிடம் கெஞ்சினார்.  இவர்தான் சுனிதாவுக்கு பார்ட்டிகளைப் பிடித்துக் கொடுப்பாராம்.இவர்கள் இருவரையும் ஏற்பாடு செய்த பெண் புரோக்கர் ராதாவையும் போலீஸார் கைது செய்தனர். விபச்சாரம் நடந்த இடத்தில் ஏராளமான சினிமா புள்ளிகள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.விருகம்பாக்கத்தில் உள்ள பல பங்களாக்கள், அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்பகுதியில் தொடர்ந்து விபச்சார வேட்டை நடைபெறும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். (தினமலர்)

சினிமாவின் தாக்கம்: இன்று இந்தியாவில் விபச்சாரம் பெருகுவதற்கு சினிமாவே அடிப்படை காரணமாக உள்ளது. இன்றைய மனித சமுதாயத்தை குறிப்பாக இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருப்பதில் சினிமா எவ்வளவு பெரிய பங்கு வகிக்கின்றது என்பது நாடறிந்த உண்மை. காசுக்காக வேஷம் போடுகின்ற ஒரு கலைதான் சினிமா. அதில் எல்லாமே போலியானது எதார்தத்திற்கு நேர்மாற்றமானது. ஒரு படத்தில் ஒரு நபருக்குத் தாயாக நடிக்கும் ஒரு பெண் இன்னொரு படத்தில் மனைவியாகவும் வேறு ஒரு படத்தில் தங்கையாகவும் நடிக்கின்ற காட்சிகளைத்தான் அதிகமாகப் பார்க்க முடிகின்றது. ஆபாசக் காட்சிகள் இல்லாத படம் எடுபடாது என்று கூறுமளவிற்கு எல்லாப் படங்களிலும் ஆபாசம் தலவிரித்தாடுகிறது. முத்தக் காட்சிகள் கற்பழிப்புக் காட்சிகள் சினிமாவில் தலைவிரித்தாடுகின்றன. கணவன் மனைவி தனி அறையில் செய்ய வேண்டியவற்றை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசிக்கக் காட்டுகின்ற கேவலமான நிலை இன்றைய சினிமாக்களில் காட்டப்படுகின்றது. ஆபாசம் கூடாது என்று சொல்லும் அரசாங்கம் சினிமாவில் ஆபாசத்தைத் திறந்து விட்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கின்ற இளைஞர்கள் ஏன் ஈவ்டீஸிங்கில் ஈடுபடமாட்டார்களா? சீரழிவதற்குண்டான எல்லா வாசல்களையும் அரசாங்கம் திறந்து விட்டு விட்டு இளைஞர்களை சீரழியும் போது அவர்களைத் தண்டிப்பது என்பது புத்திக்குப் பொருந்தாத செயல் அல்லவா? அடிதடி வெட்டு குத்து வன்முறைக் காட்சிகளை கற்பனையாக சித்தரித்து சினிமாவில் காட்டி விட்டு அதன் மூலம் கோடிகளை சுருட்டி விட்டு சுகமாக இருந்து விடுகின்றனர் தாயாரிப்பாளர்களும் நடிகர்களும்.

      இன்றைக்குத் திரைப்படங்களில் காட்டப்படும் காதல் கதைகள் யாவும் ஒரு சமூக அவலத்தை நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்றன. நீங்கள் காதல் செய்தால் அதற்காக தியாகங்களைச் செய்தால் இறுதியில் நீங்கள் அடையப் போவது சந்தோஷம் தான் என்ற செய்தி இன்றைக்கு எத்தனையோ இளைஞர்களையும் இளைஞிகளையும் தங்களது வீட்டு வாசல்படியை விட்டு வெளியேற்றி உள்ளது என்பது சிந்திக்கத்தக்கது. இவ்வாறு காதல் வசப்பட்ட ஒரு தேசம் அடைந்திருக்கும் நிர்க்கதியான நிலை என்னவென்று தெரியுமா? இன்றைக்கு நாகரீகங்களின் பிறப்பிடம் என்றழைக்கப்படும் அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் இவ்வாறு வழிகேட்டிற்கு வழி நடத்திச் செல்லப்பட்டதன் காரணமாக அங்கு 40 லிருந்து 60 சதவீதமான திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. பிரிட்டனில் 3 திருணமத்தில் ஒன்று விவாகரத்தில் முடிகின்ற  மோசமான நிலைமை உருவாகி உள்ளது. கள்ளக் குழந்தைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்த சமூகத்தில் பெருகி வருகின்றது. தாயும் தந்தையும் இல்லாமல் தெருவில் அநாதையாக விடப்பட்ட சிறுவர்கள் சிறுமிகளினால் இன்றைக்கு அந்த தேசங்களில் சமூகக் குற்றங்கள் தலைவிரித்தாடுகின்றன. உயர்தர பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் கூட தாயிடமும் தந்தையிடமும் சரியான இனக்கப்பாடு காணப்படாததால் மன இறுக்கத்திற்கு ஆளாகி தன் சக மாணவர்களையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அவலமும் நடைபெற்று வருவதை அன்றாடம் செய்தித் தாள்கள் வழியாக அறிந்து வருகின்றோம்.

      இந்தி சினிமா இறக்கை கட்டி பறக்க, மறுபுறம் கவர்ச்சி, காமம்,  தவறான உறவு இவற்றை மையப்படுத்தி பெருவாரியான படங்கள் தயாரிக்கப்பட்டன. இந்தி பேசும் மாநிலங்களை தாண்டி தமிழிலும் இப்படங்கள் வெளியாவது அதிர்ச்சியான நிகழ்வு.  மலையாள ஆபாசபடங்கள் வரத்து தமிழகத்தில் ஏறக்குறைய நின்றுபோன நிலையில், அந்த இடத்தை பாலிவுட்டின் பலான படங்கள் நிரப்பியுள்ளன. தமிழில்  நடித்த இஷா கோபிகர், 'ஜே ஜே' நாயகி அமோகா போன்ற முன்னணி நடிகைகள் இதுபோன்ற கவர்ச்சி படங்களில் நடிக்க தயங்குவதில்லை என்பது இன்னொரு ஆச்சரியம்! பெண்ணுடன் பெண் உறவு கொள்ளும் இஷா கோபிகரின் 'கேர்ள் பிரெண்ட்' படம், இந்தியாவின் முதல் லெஸ்பியன் படம் என்ற விளம்பரத்துடன் தமிழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று டஜன் திரைப்படங்கள் பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வர வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றின் உள்ளடக்கத்தை இப்படங்களின் பெயர்களே நமக்கு உணர்த்தி விடுகின்றன. '8-வது இரவு', 'உச்சக்கட்டம்',  'சிருங்காரி', 'சேத்னாவின் இரவுகள்'. baலருடன் தவறான உறவு வைத்துக்கொள்வது, கணவனுக்கு துரோகம் இழைப்பது, விலைமாதுவின் இரவு வாழ்க்கை, பில்லிசூன்யம், நிர்வாணபூஜை...ஆகியவையே இப்படங்களின் கதை களங்கள்.

     கற்பு குறித்தும் கலாச்சாரம் குறித்தும் படங்களின் பெயர் குறித்தும் கூச்சலிடும் அமைப்புகள் இந்த பாலிவுட் பாய்ஸனை கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்தைவிட அதிர்ச்சியை அளிக்கிறது. ஒருவகையில் மலையாள காலைக்காட்சி படங்களைவிட இவை அபாயகரமானவை. மலையாளப் படங்களை பார்க்க செல்லும் பார்வையாளர்கள், தவறான ஒன்றில் ஈடுபடும் குற்றவுணர்வுடன் முடிந்த அளவு தங்களை மறைத்துக்கொண்டே தியேட்டருக்குள் நுழைகிறார்கள். மேக்னா நாயுடு, இஷா கோபிகர், சுஷ்மிதா சென் போன்ற முன்னணி நடிகைகள் நடித்திருப்பதால் பாலிவுட் படங்கள் பார்வையாளர்களுக்கு எவ்வித குற்றவுணர்வையும் ஏற்படுத்துவதில்லை. சாதாரண பார்வையாளர்களின் மனநிலையுடனேயே இவர்கள் டிக்கெட் வாங்குகிறார்கள். திருட்டை அது திருட்டு எனும் குற்றவுணர்வு இல்லாமல் செய்யும் அபாயகரமான மனநிலை இது. இந்த அழிவுப்பாதைக்கு முடிவு கட்டுவது யார்? தமிழ் கலாச்சார உலகின் மிகப்பெரிய கேள்வி இது!

     விபசாரம்! வி.ஐ.பி! விருந்து! கன்னட பிரசாத்துக்குப் பிடித்த மூன்று வார்த்தைகள் இவைகளாகத்தான் இருக்க வேண்டும். விபசாரத் தொழிலில் ஒரு விறுவிறு சாம்ராஜ்யமே நடத்தி வந்த கன்னட பிரசாத், இப்போது கைதாகி காவலில் இருக்கிறான். எப்போது வேண்டுமானாலும் வெடிக்கத் தயாராக இருக்கும் வெடிகுண்டு போல, அவன் எந்த நேரத்தில் எந்தத் தகவலை அவிழ்த்து விடுவானோ என்று அலறிப் போய் நிற்கிறார்கள், அவனுடன் தொடர்பு வைத்திருந்த நடிகைகள், அரசியல்வாதிகள் மற்றும் போலீஸார். கன்னடபிரசாத் வெளியிடப்போகும் விவரங்கள், தமிழக அரசியல் அரங்கத்தையும் ஆட்டம்காண வைக்கும் ஆபத்து உள்ளது.

            இந்த கன்னட பிரசாத் யார்? அவருக்குத் தொழில் ரீதியாக யார் யாருடன் தொடர்பு? இந்தக் கேள்விகளுக்குப் பல்வேறு பரபரப்பு யூகங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டி, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கன்னட பிரசாத்தைப் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு சந்தித்துப் பேசி பேட்டி கண்டுள்ளது குமுதம் ரிப்போர்ட்டர்.  

     விபசாரத் தொழிலில் எப்படி நுழைந்தீர்கள்? ‘‘நான் பாபுவிடம் சேர்ந்த போது, அவர் துணை நடிகைகளை படப்பிடிப்புக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுதான் என்று நினைத்தேன். ஆனால் ஷ¨ட்டிங் இல்லாத நாட்களில் அந்தத் துணை நடிகைகளை வைத்து அவர் விபசாரமும் செய்கிறார் என்பதைப் பின்னர்தான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு என்னிடம், அந்தப் பெண்களை சம்பந்தப்பட்ட பார்ட்டிகளின் இடத்திற்கு அழைத்துச் சென்று விடச் சொல்வார் பாபு. நானும் அதுபோல் பெண்களை அழைத்துச் சென்று விடுவதும், அழைத்து வருவதுமாக சில மாதங்களைக் கழித்தேன். அதற்கு எனக்குச் சம்பளமாக ஐம்பது அல்லது நூறு ரூபாய்தான் கிடைக்கும்.அந்த நேரத்தில் சென்னையில் விபசாரத் தொழிலில் ஒஹோவென கொடிகட்டிப் பறந்தவர் சுப்பையா. அவர் அடிக்கடி வந்து பாபுவைப் பார்த்து விட்டுப் போவார். பாபுவும் போய் சுப்பையாவைச் சந்தித்து விட்டு வருவார். அந்த நேரங்களில் நானும் பாபுவுடன் சேர்ந்து சுப்பையா வீட்டிற்கும் போய் வருவேன்.எனது அணுகுமுறையும், நடவடிக்கைகளும் சுப்பையாவுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. ஒரு நாள் சுப்பையா என்னிடம், ‘நீ என் கூடவே இருந்துடேன்என்று கூற, நானும் மகிழ்ச்சியுடன் அவருடன் சேர்ந்து விட்டேன். அன்று முதல்தான் விபசாரத் தொழிலில் நான் நேரடியாக ஈடுபடத் தொடங்கினேன். இந்தத் தொழிலில் எனக்கு குரு சுப்பையாதான்.’’

            பின்னர் நீங்கள் தனியாகத் தொழில் தொடங்கியது எப்படி?‘‘நான் சுப்பையாவிடம் உதவியாளனாக இருந்த போதுதான், இந்தத் தொழிலின் நெளிவு சுளிவுகளை யெல்லாம் தெரிந்து கொண்டேன். யார் யாரிடம் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முழுவதும் அறிந்து கொண்டேன். அப்போதெல்லாம் சுப்பையாவின் வீட்டிற்குப் பல அரசியல் புள்ளிகளும், போலீஸ் அதிகாரிகளும் வந்து போவார்கள். அந்த நேரத்தில் சென்னையில் கொடிகட்டிப் பறந்த மீசைக்கார போலீஸ் அதிகாரி ஒருவர் சுப்பையாவின் ரெகுலர் கஸ்டமர்.இப்படியாக இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒருநாள் நான் சுப்பையாவிடம் தனியாகத் தொழில் நடத்தலாம் என்ற எனது விருப்பத்தைச் சொன்னேன். உடனே அவரும் வடபழனியில் ஒரு வீட்டை வாடகைக்குப் பேசி, அதற்கு அட்வான்ஸ§ம் கொடுத்து, மூன்று பெண்களையும் என்னுடன் அனுப்பி எனது தொழிலுக்குப் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தார்!’’

            சாதாரண விபசார புரோக்கராக தொழிலைத் தொடங்கிய உங்கள் வலையில், சினிமா கதாநாயகிகளைச் சிக்க வைத்தது எப்படி? ‘‘நான் ஆரம்பத்தில் சாதாரண துணை நடிகைகளை வைத்துத்தான் தொழில் செய்து கொண்டிருந்தேன். ஆனாலும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் என்னுடைய பெயர் வேகமாகப் பிரபலமடைந்து விட்டது. இதைத் தெரிந்து கொண்ட, சைதாப்பேட்டையைத் தலைமையிடமாக கொண்டு தொழில் புரியும் ஒரு வர்த்தகப் பெரும்புள்ளி, ஒரு நாள் எனக்கு போன் செய்தார். வாழ்வே மாயமான அந்த ப்ரிய நடிகை தனக்கு வேண்டும் என்று கேட்டார். அவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருப்பவர் என்னிடம் பேசியது அதுதான் முதல் முறை. அதே போல் முன்னணி கதாநாயகி ஒருவர் வேண்டும் என்று என்னிடம் கேட்கப்பட்டதும் அதுதான் முதல் முறை. எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மிகுந்த சிரமப்பட்டு அந்த நடிகையின் மேனேஜரின் போன் நம்பரை வாங்கினேன். அவரிடம் தொடர்பு கொண்டு விஷயத்தை மெதுவாகவும் பக்குவமாகவும் எடுத்துச் சொன்னேன். ஆரம்பத்தில் அடம்பிடித்த அவர், நடிகையைக் கேட்டவரின் பெயரைச் சொன்னதும் கொஞ்சம் கூலானார். நடிகையிடம் கேட்டுவிட்டுச் சொல்வதாகக் கூறி, என் போன் நம்பரை வாங்கிக் கொண்டார். அடுத்த அரைமணி நேரத்தில் அவரே என்னை அழைத்து நடிகை ஓ.கே. சொல்லிவிட்டதாகக் கூறினார். எனக்கு தலைகால் புரியவில்லை.மறுநாளே அவர்கள் இருவரையும் தங்க வைக்க கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டை ஏற்பாடு செய்தேன். காரியம் முடிந்த மறுநாள் என்னை அழைத்தார் அந்த வர்த்தகப் புள்ளி. அவர் முகத்தில் மிகுந்த மகிழ்ச்சி தெரிந்தது. அதற்கு விலையாக எனக்கு ஐம்பதாயிரம் ரூபாயைக் கொடுத்தார். இந்தத் தொழிலில் நான் முதன் முதலில் அதிகமாகப் பார்த்தது அந்தப் பணம்தான். அதுவும் அந்த நடிகையின் புண்ணியத்தில்தான். அதன் பிறகு எத்தனையோ நடிகைகள், எத்தனையோ கோடிகள் வந்து போய்விட்டன.’’

            உங்களுக்கு இந்தத் தொழிலில் ஒத்துழைத்த நடிகைகள் யார் யார்?  ‘‘யார் யார் ஒத்துழைத்தார்கள் என்று கேட்பதை விட, யார் யார் ஒத்துழைக்கவில்லை என்று கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். காரணம், அந்த அளவிற்கு முன்னணி நடிகைகள் அனைவரோடும் எனக்கு நெருக்கமான தொடர்பு இருக்கிறது.நான் இந்தத் தொழிலுக்கு வரத் தொடங்கிய நேரத்தில், அப்போது தமிழ் சினிமாவில், நான் முன்பே கூறிய ப்ரிய நடிகை, முகத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நடிகை, வெளிநாட்டில் படித்துவிட்டு வந்த நடிகை, அக்கா, தங்கை நடிகை ஆகியோர் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். எனது முதல் முயற்சி ப்ரிய நடிகையிடம் வெற்றியடைந்து விட்டதால், அதன் பிறகு இந்த நடிகைகள் பலரிடம் நானே பேசி புக் பண்ணியிருக்கிறேன்.மொத்தத்தில் இந்தத் தொழிலில் என்னிடம் வராத நடிகைகளின் பெயர்களைச் சொல்வதுதான் சுலபமாக இருக்கும். அந்த அளவிற்கு ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் ஒருமுறையாவது என்னிடம் தொடர்பு வைத்துள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். காரணம், ஒரு பெரிய புள்ளியோ, உயர் அதிகாரியோ இந்த நடிகைதான் வேண்டும் என்று என்னிடம் கூறிவிட்டால், எப்பாடுபட்டாவது எவ்வளவு செலவழித்தாவது நான் அந்த நடிகையை புக் செய்தே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எனக்கு வந்துவிடும். அப்படி ஒரே முறை வந்துபோன நடிகைகளும் உண்டு. என்னிடம் அதிக முறை வந்து போனவரும் என்னுடனும் சரி, கஸ்டமர்களோடும் சரி எப்போதும் சிரித்த முகத்துடனேயே பேசிப் பழகியவரும், பழகுவதற்கு இனிமையானவரும் என்றால், அது பூ நடிகை மட்டும்தான்.’’

            இப்படி பல நடிகைகள் உங்களிடம் விழுந்து கிடக்கக் காரணம் என்ன? ‘‘ஒரே காரணம் பணம்தான். ஒரு நடிகை எவ்வளவுதான் பெயரோடும், புகழோடும், வசதியோடும் வாழ்ந்தாலும் அவருக்கு மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். அவர் ஒரு படத்தில் நடித்தால் பத்து லட்சமோ, இருபது லட்சமோ சம்பளம் கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும், அந்தப் படத்திற்காக அந்த நடிகை குறைந்தது இரண்டு மூன்று பேரை இரண்டு மூன்று முறையாவது திருப்தி செய்ய வேண்டியிருக்கும்.அது மட்டுமின்றி, இரண்டு மாதங்களாவது அந்தப் படத்திற்காக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். நூறு முறை மேக்கப் போட வேண்டும், இருநூறு முறை உடை மாற்ற வேண்டும். இவ்வளவுக்குப் பிறகே, அந்தப் பணம் அந்த நடிகையின் கையில் கிடைக்கும். அதிலும் சில நேரங்களில் அந்தச் சம்பளத்தைக் கூட தராமல் ஏமாற்றும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.

            தொலைக்காட்சித் தொடர் நடிகைகளில் உங்களிடம் தொடர்புள்ளவர்கள் யார் யார்? ‘‘டி.வி. சீரியல் நடிகைகள் பலர் என்னிடம் இன்று வரை தொடர்பில் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் விபசார சிக்கலில் மாட்டிய ஒரு நடிகை முதல் இப்போது கல்யாண சிக்கலில் இருக்கும் நடிகை வரை பலருடனும் எனக்குப் பழக்கம் உண்டு. என்னிடம் தொழிலில் இருந்துவிட்டு இப்போது தொலைக்காட்சித் தொடர்களில் பிரபலமாகியிருக்கும் நடிகைகளும் உண்டு. ஆரம்பத்தில் கங்கையான தொடரில் நடித்த முக்கிய நடிகை என் ரெகுலர் கஸ்டமர்.’’ அயல்நாட்டுப் பெண்களையும் நீங்கள் அழைத்து வந்து தொழில் நடத்துகிறீர்களாமே?‘‘உண்மைதான். இந்தியா மட்டுமின்றி பின்லாந்து, ரஷ்யா, பிரான்ஸ், தாய்லாந்து போன்ற வெளிநாட்டுப் பெண்களையும் வைத்து நான் தொழில் செய்திருக்கிறேன். அதிலும் பின்லாந்தைச் சேர்ந்த ஆறு இளம் பெண்களை இரண்டு வருடம் சென்னையிலேயே தங்க வைத்துத் தொழிலில் ஈடுபடுத்தினேன். இந்தியத் தொழிலதிபர்கள் சிலரே தங்களுக்கு வெளிநாட்டுப் பெண்கள் வேண்டுமெனக் கேட்பார்கள். அதேபோல், வெளிநாடுகளிலிருந்து இங்கு வியாபார விஷயமாக வந்து போகும் வி.ஐ.பி.களுக்கும் வெளிநாட்டுப் பெண்கள் தேவைப்படும். எனவே, உலகின் பல நாடுகளின் பெண்கள் என் தொடர்பில் இருப்பார்கள்!’’

இந்தியாவில் வெளி மாநிலங்களில் வறுமையில் வாடும் ஏழைப் பெண்கள் சிலரை நீங்கள் ஏமாற்றி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்துகிறீர்களாமே? ‘‘நான் விபசார புரோக்கர்தான். அதை மறைக்கவில்லை. அதே நேரத்தில் நான் இதுவரை ஒரு பெண்ணைக் கூட ஏமாற்றி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதில்லை. ஆந்திரா, பெங்களூர், மும்பை, கொல்கத்தா போன்ற வெளி மாநிலங்களிலிருந்து பதினாறு முதல் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட அழகிய இளம் பெண்களை முதலில் தேர்வு செய்வேன். அவர்களை அழைத்து, சென்னைக்கு வந்து என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் ஊரில் வைத்தே தெளிவாகப் பேசிவிடுவேன்.அதன்பிறகு, ஒவ்வொரு பெண்ணுக்கும் வயதுக்கும் அழகுக்கும் தக்கபடி சம்பளம் நிர்ணயிப்பேன். எவ்வளவு அழகான பெண்ணாக இருந்தாலும் சரி, எல்லாருக்குமே பதினைந்து நாள்தான் காண்ட்ராக்ட். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு நாளைக்கு இரண்டாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் வரை சம்பளம் பிக்ஸ் செய்வேன். அதில் பாதித் தொகையை அங்கேயே கொடுத்துவிடுவேன். அந்தப் பணத்தை அந்தப் பெண்கள் தங்கள் வீடுகளில் கொடுத்துவிட்டு என்னுடன் வருவார்கள். ஒரு பெண் ஊரிலிருந்து புறப்பட்டதிலிருந்து போக்குவரத்து செலவுகள், துணிமணிகள், சாப்பாடு, தங்கும் வசதி, மெடிக்கல் செக்கப் இவையெல்லாமே என் செலவுதான். கடைசியில் பதினைந்து நாட்கள் கழித்து, அவர்கள் ஊருக்குப் போகும்போது மீதமுள்ள பாதிப் பணத்தை அவர்களிடம் கொடுத்து அனுப்பி வைப்பேன். இதனால் என்னிடம் வரும் ஒவ்வொரு பெண்ணும் மகிழ்ச்சியுடன்தான் ஊருக்குப் புறப்படுவார்கள்.’’

            நடிகர்கள் யாராவது உங்களிடம் நடிகைகள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்களா?‘‘அதுபோல் யாரும் கேட்டதில்லை. அந்த அவசியமும் இல்லை. காரணம் சினிமாவில் நடிகர்கள் பார்த்து அனுப்பிய பிறகுதானே, நடிகைகள் எங்களிடம் தொழிலுக்கே வருகிறார்கள்.ஆனால் ஒரு நடிகரைக் கேட்டு ஒரு கோடீஸ்வரி என்னிடம் பேசினார். எனக்கு மலேசியாவில் நல்ல தொடர்புகள் இருக்கிறது. ஒருநாள் மலேஷியாவைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரப் பெண் என் உதவியாளர் மூலம் என் செல்நம்பரை வாங்கி, எனக்கு போன் செய்தார். சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணுக்கு இப்போதுள்ள சாந்தமான ஒரு நடிகருடன் ஒருமுறையாவது உறவு கொள்ளவேண்டும். அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன். அடுத்த மாதம் அந்த நடிகர் மலேசியாவில் ஒரு புரோகிராம் நடத்த வரவிருக்கிறார். அதற்குள் ஏற்பாடு செய்யுங்கள்என்று கெஞ்சிக் கேட்டார்.நான் அந்த சாந்த நடிகரின் நண்பர் மூலம் அவரைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லி அந்த கோடீஸ்வரப் பெண்ணின் தொலைபேசி எண்கள், விலாசம் ஆகியவற்றைத் தந்தேன். ஒரு மாதம் கழித்து மலேசியப் புரோகிராமுக்குப் போய்விட்டு வந்தார் அந்த நடிகர். மறுநாளே எனக்கு போன் செய்து நன்றி சொன்னார், அந்த கோடீஸ்வரிப் பெண்.’’

     உங்களுடன் தொடர்புடைய அரசு அதிகாரிகள் இருக்கிறார்களா? ‘‘தொழிலதிபர்கள் பலர் எனது கஸ்டமர்கள். ஆனால், அரசு அதிகாரிகளுக்கு நான்தான் கஸ்டமர். காரணம், அவர்கள் போன் செய்து எந்த நடிகை, எப்போது, எங்கு வர வேண்டும் என்று கூறிவிடுவார்கள். நான்தான் சொந்தச் செலவில் அந்த நடிகையை ஏற்பாடு செய்து அனுப்பவேண்டும். அதுமட்டுமின்றி, தொழில் மாமூலாக சில ஆயிரங்கள் பணத்தையும், அந்த அதிகாரிகளுக்கு நான் கொடுத்து அனுப்பவேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் முதல் Êஏ.சி., இன்ஸ்பெக்டர்கள் வரை பல அதிகாரிகளின் தேவைகளை நான் பூர்த்தி செய்திருக்கிறேன். பல அதிகாரிகள் வீடுகள் வாங்க, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய எனப் பல லட்சங்களை என்னிடமிருந்து பிடுங்கிவிடுவார்கள்.

            சமுதாயத்தைச் சீரழிக்கும் இந்தக் கேவலமான தொழிலைச் செய்வதற்காக நீங்கள் எப்போதாவது அசிங்கமோ, வருத்தமோ பட்டதுண்டா? ‘‘எப்போதாவது மனம் கஷ்டப்படும். ஆனால், இந்தத் தொழிலையே நான் மிகவும் நேர்மையாகச் செய்கிறேன். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மக்களை ஏமாற்றி, அவர்களின் வயிற்றிலடித்துச் சம்பாதிக்கிறார்கள். அதேபோல், சினிமாவில் நடிக்க வரும் பெண்களின் கனவுகளைப் பயன்படுத்தி அவர்களின் கற்பில் விளையாடி மகிழ்கிறார்கள். ஆனால், இந்தத் தொழிலில் அப்படியெல்லாம் இல்லை. பணம் தேவைப்படும் பெண்களையும், சுகம் தேவைப்படும் ஆண்களையும் சேர்த்து வைக்கிறோம். இருவரின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகின்றன. இடையில் எங்களுக்கும் பணம் கிடைக்கிறது. இது சமுதாயத்தில் இழிவான தொழிலாக இருந்தாலும், ஏமாற்றுத் தொழில் கிடையாது. (குமுதம் ரிப்போர்டர்)

            சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரன் நகரை சேர்ந்தவர் நாராயணன். லெதர் தொழிற்சாலை நடத்தி வந் தார். இவரது ஒரே மகள் பத்மா என்ற பத்மாவதி (வயது 29). நாராயணன் கண்டிப்பானவர். தனது மகள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சட்ட திட்டம் போடுவார். ஆனால் பத்மாவுக்கு தாய் அதிக செல்லம் கொடுத்தார். நாராயணனுக்கு தெரியாமல் `பாக்கெட் மணி' என பணத்தை அள்ளி கொடுத்தார். இதனால் அவருக்கு தோழிகள் மட்டுமல்ல ஆண் நண்பர்களும் அதிகம். அடிக்கடி பிïட்டி பார்லர், பிக்னிக், குரூப்ஸ்டெடி என பத்மா வீட்டில் சொல்லி விட்டு ஊர் சுற்ற புறப்பட்டு விடுவார். இப்படியே பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து முடித்த பத்மாவுக்கு உல்லாச வாழ்க்கை மீது தவிர்க்க முடியாத ஈர்ப்பு ஏற்பட்டது.பணத்தேவைக்காக தனியார் நிறுவனம் ஒன்றில், குவாலிட்டி அனலிசிஸ்ட் வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனத்தின் மேனேஜர் முதல் கடைநிலை ஊழியர் வரை பத்மாவின் அழகில் மயங்கினர். ஸ்கூட்டியில் ஜீன்ஸ் பேண்ட் டைட்டான ஸ்லீவ்லெஸ் டிரெஸ் அணிந்து பத்மா அலுவலகத்துக்கு செல்வார். அவரது அங்கங்கள் இலைமறை காயாக தெரியும் படியான ஆடைகளையும் அடிக்கடி அணிந்து செல்வார்.கல்லூரி நாட்களிலேயே ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றிய பத்மாவுக்கு அலுவலக ஊழியர்கள் சிலர் புதிய கம்பெனியன் ஆனார்கள். ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை வீணடித்த பத்மாவுக்கு ஊழியர்கம் மூலம் ஆயிரக்கணக்கில் பணமும் பரிசு பொருட்களும் கொட்ட தொடங்கியது.அசப்பில் சினிமா நடிகை போல் இருப்பதை மூலதன மாக வைத்து ஊழியர்களையும் அதிகாரிகளையும் மயக்கி கைக்குள் போட்டார். ஒருமுறை மிக குறைவாக ஆடை அணிந்து வேலைக்கு புறப்பட்ட பத்மாவை அவரது அப்பா நாராயணன் சரமாரியாக அடித்து உதைத்தார். அது முதல் இருவரும் சரியாக பேசிக் கொள்வதில்லை எல்லாமே அம்மாதான்.நள்ளிரவில் வீட்டிற்கு செல்வது கிடையாது. ஆண் நண்பர்களுடன் பண்ணை வீடுகளில் தங்கி மது அருந்தி கும்மாளம் போட்டு விட்டு காலையில் தான் வீடு திரும்புவார். வீட்டில் வந்து அலுவலகத்தில் அதிக வேலைப்பளு என `ரீல்' விடுவார்.இவருக்கு நிறைய தொழில் அதிபர்கள் இந்த அலுவலகத்தில் பணிபுரிந்ததன் மூலம் அறிமுகமாகி உள்ளனர். ஒரு முறை ஒருவர் பார்ப்பதற்கு நடிகை நமீதா போல் இருக்கிறாயே நான் எடுக்க போகும் அடுத்த படத்துக்கு நீதான் கதாநாயகி என அளந்து விட்டுள்ளார். அதை நம்பி அவருடன் பத்மா உல்லாசம் இருந்தார். பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதற்கிடையே தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் நாராயணன் லெதர் தொழிலை கைவிட்டுவிட்டார். இதனால் பத்மாவுக்கு அம்மா மூலமாக வரும் `பாக்கெட் மணி' ரத்தானது. வேறு வழியின்றி தோழிகள் அறிவுறுத்தலோடு மாடலிங்கில் குதித்தார் பத்மா.இவரை படம் பிடித்த போட்டோ கிராபர் முதல் வாய்ப்பு தருவதாக கூறிய தயாரிப்பாளர் வரை அனைவரும் அழையா விருந்தாளியாய் வந்த பத்மாவை பதம் பார்த்து அனுப்பி வைத்தனர். ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையான பத்மா நாளடைவில் தொழில் நிறுவன வேலையை விட்டு விட்டு சினிமா நடிகையாகும் மோகத்தில் அழைந்து திரிந்தார்.அப்போது `அஷ்டாவதானி' இயக்குனரின் நண்பர் மூலமாக படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. `வீராசாமி'யில் நடித்தார். அடுத்து `பத்துக்கு பத்து' என்ற படத்தில் நடித் தார். அது பாதியில் நிற்கிறது. தன்னை பற்றிய விபரங்களை புகைப்படத்துடன் இணைய தளத்தில் வெளியிட்டும் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பியும் சினிமா வாய்ப்பு வேட்டையில் இறங்கி னார். அப்போது, இவருடன் மாடலிங் தொழிலில் பழகிய சஞ்சய் என்பவர் மூலம் விபசாரத்தில் பகிரங்கமாக தள்ளப்பட்டார்.இதில் பத்மாவுக்கு லட்சக் கணக்கில் பணம் கொட்டியது பத்மா சஞ்சய் வழிகாட்டுதலின்படி பெரிய பெரிய ஓட்டலுக்கு சென்று தொழில் அதிபர்களை சந்தித்து தாகம் தீர்த்தார். குடித்து கும்மாளம் போட்டார். லட்சக்கணக்கில் பணம் குவிய தொடங்கியது. தொழிலுக்கு வசதியாக சொகுசு கார் வாங்கினார்இன்னும் நிறைய பணம் கிடைத்தால் சொந்த படம் எடுக்கலாம் என சஞ்சய் ஆசைவார்த்தை கூறவே ஆந்திர தொழிலதிபரின் செக்ஸ் பலகீனத்தை பயன் படுத்தி பணம் பறிக்க திட்டமிட்டிருக்கின்றனர். `பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான' கதையாய் பத்மா வலையில் தொழில் அதிபர் விழ போலீஸ் விரித்த வலையில் பத்மா தனது சகாக்களுடன் சிக்கிக் கொண்டார். 40 தொழில் அதிபர்கள் பத்மாவின் செக்ஸ் வலையில் விழுந்து உள்ளனர். அவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசார் பத்மா வீட்டிலும் அவர் வேலை பார்த்த நிறுவனத்திலும் நடத்திய விசார ணையில் மேற்கண்ட விவரம் தெரிய வந்துள்ளது. (தினத்தந்தி)

தொலைகாட்சியின் தாக்கம்: செக்ஸ் டாக்டர் பிரகாஷ்விவகாரம் தொடர்பாக அம்பிகை அவளுக்கு மேலே ஒரு வானம் போன்ற தொடர்களில் நடித்தபிரபல டி.வி. நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு கோர்ட்டுக்கு புர்காவுடன் (முஸ்லிம்களின் கண்ணிய ஆடை)  சென்று வருகிறார். இவரைத் தொடர்ந்து டி.வி. நடிகை சிந்துஅவரது சகோதரி ஆயிஷா என்ற சுவேதா மாடலிங்க் செய்து வரும் ஸ்ரீஷா ஆகியோர் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டனர். இதைப் போன்று டி.வி. நடிகை பாவனா என்றபெண்ணின் ஆபாச படங்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இப்படி பல நடிகைகள் விபச்சாரதொழிலில் ஈடுபட்டு வருவது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. பணம் கொடுத்தால் எந்தவேஷத்தையும் ஏற்கத் தயார்! எப்படியும் நடிக்கத் தயார்! எதையம் செய்யத் தயார்!என்பவர்கள் இந்த சினிமா டி.வி. நடிகைகள்! இன்று பணத்திற்காக உத்தமிகளாக நடித்தவர்கள் விபச்சாரம் செய்யத் துணிந்து விட்டார்கள். தொடர்ந்து விபச்சாரவழக்கில் நடிகைகள் கைது செய்யப்படுகின்றனர்.சாதாரண பெண்களிடம் இருக்கும் ஒழுக்கம் கூட இல்லாத இந்த நடிகைகள் நடித்த தொடருக்காக பொன்னான பலமணி நேரத்தை வீணடிக்கலாமா?

      வளைகுடாவில், குறிப்பாக துபாயில் பல இலட்சக்கணக்கான இந்தியர்கள் வசிக்கிறார்கள்.இவர்கள்அனைவரும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் பல மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இங்கு வேலை முடிந்து அறைகளுக்கு வந்த பின் மன ஆறுதலுக்காக தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து தம் தம் மாநில மொழி தொலைக்காட்சி தொடர்களை பார்க்கிறார்கள். ஆனால் இத்தொடர்களை பார்ப்பதால் மன ஆறுதல் கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. ஏனெனில் இத்தகைய தொடர்கள் அனைத்து மனத்திற்கு வேதனையும், மன பாரத்தினையும், மன கஷ்டத்தினையும் தருவதாக இங்குள்ளவர்கள் கருத்தினை கூறுகிறார்கள். வன்முறை, ஆபாசம், காதல் என்ற கருத்தினை வலியுறுத்துவதாக உள்ள அளவில் தான் இத்தகைய இந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் இருக்கின்றன என்றால் மிகையாகாது. இவற்றினை பார்க்கும் இங்குள்ள இளைய சமுதாயமானது மிக விரைவில் கெடக்கூடிய வாய்ப்பினை நிச்சயமாக தருகின்றன. துபாயில் பல அனாச்சாரங்கள் நடைபெறுவதற்கும் இத்தகைய தொடர்களும் ஒரு காரணியாக உள்ளன. கலாச்சாரம், பண்பாடு என்பதனை தூக்கி ஏறிந்து விட்டு தான் இத்தகைய தொடர்கள் உள்ளன. சில பேர்கள் குடும்பத்துடன் இங்கு வசித்து வருகிறார்கள். அவர்களும் தம்முடைய மனைவியுடனோ, குழந்தைகளுடனோ அமர்ந்து பார்க்க முடிய அளவில் ஆபாசங்கள் அதிகமாக இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். மற்றும் இங்குள்ள பல அரேபியர்கள் இந்திய மொழிகளான தமிழ், மலையாளம், இந்தி ஆகியவற்றினை கற்றவர்களாகவும், மற்றும் பேசக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களும் இத்தகைய இந்தியத் தொலைக்காட்சித் தொடர்களையும் பார்க்கிறார்கள். அவர்களின் மனத்திலும் இப்படித்தான் இந்தியாவும் இருக்கும் என்றும் எண்ணுகிறார்கள். வளைகுடாவில் இருந்துக்கொண்டு இந்தியா தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தொலைபேசியிலும், கடிதம் மூலமாகவும், Message மூலமாகவும் பணத்தினை வீண் விரயம் செய்த எத்தனையோ பேர்களை நாம் கண் கூடாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இவற்றிற்கு தமிழ் சகோதரர்கள் மட்டும் அல்ல, மற்ற மாநில சகோதரர்களும் அடிமையாகி விட்டார்கள் என்ன செய்வது.தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு சில நல்ல விசயங்கள் இருந்தாலும்; மட்டரகமாக வரும் தொலைக்காட்சி தொடரினால் அத்தகைய நல்ல விசயங்களும் அழிந்து போய் விடுகிறது. மேலைநாட்டு ஆதிக்கம் ஊடகத்துறையில் அதாவது முக்கியமாக தொலைக்காட்சியினை அதிகமாக ஆதிக்கம் செய்து விட்டதால் இத்தகைய மனத்தினை கெடுக்கும் நிகழ்ச்சிகளும் சரியே, மற்றும் தொடர்களும் குறைவே குறையாது.

அயல் நாட்டில் விபச்சாரம்:  மேற்கத்தைய கலாச்சாரம் பல நாடுகளை நாள்தோறும் சுரண்டிக்கொண்டே இருக்கிறது அத்தகைய நாடுகளில் துபாயும் ஒன்றாக மாறி விட்டதோ..? என்ற கவலையானது இங்கு இருக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறது. அத்துடன் விஞ்ஞான வளர்ச்சியினை காட்டிலும் கலாச்சார சீரழிவானது மேன் மேலும் வளர்ச்சியினை கண்டு விட்டது இந்நாட்டில், என்பது குறிப்பிடத்தக்கது. இது தான் என்று இல்லை மேற்கத்தைய கலாச்சார ஷைத்தான்கள் வார்த்தைகளால் எழுத முடியாத வடிவிலும், சொல்லால் கூற முடியாத வடிவிலும் இங்குள்ள ஒவ்வொருவரையும் மனதால் கெடுத்துக்கொண்டு இருக்கிறான். மேலே குறிப்பிட்ட செய்தினை மட்டும் இல்லை, குவைத் நாட்டில் நடைபெற்ற சம்பவத்தினையும் மேற்கொள்காட்டி அதே நாளிதழ் செய்தினை ஒன்றினை தந்து உள்ளது. குவைத் நாட்டில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் மகனை கடத்திக்கொண்டு போய் கற்பழித்தாகவும், அவர்கள் எந்த நாட்டை சார்ந்தவர்கள் என்பதினையும், கற்பழிக்கப்பட்ட நபர் எந்த நாட்டை சார்ந்த என்பதினையும் அந்த நாளிதழ் தன்னுடைய செய்தியில் குறிப்பிடவில்லை. இந்த விசயத்தினை குவைத் நாட்டு அரேபிய நாளிதழான 'அல் ராய்' வெளியிட்டு இருந்தது. 'இவர்களுக்கு தண்டனையாக அந்நாட்டின் கீழ் நீதி மன்றம் 15 ஆண்டுகள் கொடுத்தது. ஆனால் அப்பீல்ஸ் நீதி மன்றம் அதை குறைத்து 7 ஆண்டுகளாக ஆக்கி உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதனை துபாயிலிருந்து வெளிவரும் ஆங்கில செய்திப்பத்திரிகையான 'Khaleej Times' குறிப்பிட்டு இருந்தது தன்னுடைய செய்திக்குறிப்பில். 

           ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் தானிகரின் அறிக்கையின்படி சுமார் 1.2 மில்லியன் ஈராக் அகதிகள் சிரியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிரிய அரசாங்கத் தகவல்களின்படி இத் தொகை 1.2 மில்லியனை விடவும் அதிகமாகும். ஈராக் அகதிகளின் படு மோசமான பொருளாதார நிலை பற்றி மேலும் விளக்கும் ஐ.நா. அறிக்கை 'பெண்களின் குறிப்பாக கட்டிளமைப் பருவத்தினரின் பொருளியல் கையறு நிலையும் பட்டினியும் அவர்களை இரகசியமாகவோ அல்லது ஏனைய குடும்ப அங்கத்தவரின் அனுசரணையுடனோ பாலியல் தொழிலாளர்களாக மாற்றியுள்ளது' எனத் தெரிவிக்கிறது. பெரும்பாலும் குடும்பத்திலுள்ள மூத்தோர் தமது பொறுப்பிலுள்ள 'பாலியல் பண்டத்தின்' தரகர்களாய் மாறியுள்ள அவலத்தையும் விபரித்துச் செல்கிறது அறிக்கை.அரச சார்பற்ற நிறுவனங்களின் நிவாரணப் பணியாளர்கள் இடம் பெயர்ந்து வந்துள்ள ஆயிரக் கணக்காக ஈராக்கியப் பெண்கள் சிரியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகின்றனர். 'சிரியாவில் தஞ்சமடைவோரில் அனேகம் பெண்கள். தாமே குடும்பப் பாரத்தைச் சுமக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் அவர்களது குடும்பத்திலுள்ள ஆண்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது கடத்திச் செல்லப்பட்டு விட்டனர்'. என்று கூறுகிறார் இந்த அகதிகளைப் பராமரிக்கும் பணியில் இருக்கும் டமஸ்கஸ் திருக்குடும்ப கன்னியர் மடத்தைச் சேர்ந்த அருட்சகோதரி மேரி க்ளோட். மேலும் அவர் கூறுகையில் 'மசாகென் பர்சஹ் என்ற டமஸ்கஸ் புறநகர் பகுதியில் தமது கொன்வன்ட் நடத்திய ஆய்வு ஒன்றில் சிறிய அளவிலான அந்த சுற்றுவட்டாரத்தில் பெண்களை குடும்பத் தலைவர்களாகக் கொண்ட 119 குடும்பங்கள் வசிக்கின்றன. பிழைப்பதற்கான தொழிலொன்றைத் தேடி வாழ்நாளில் முதன் முதலாக வெளியே வரும் பெண்களாக அவர்கள் இருக்கின்றனர். ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தின் விகிதம் மிக அதிகம் இருக்கும் ஒரு நாட்டில் அவர்களது உடலை விற்பதைத் தவிர வேறு எந்த வேலை வாய்ப்பையும் அவர்களால் பெற முடியாதிருப்பது கசப்பான உண்மையாகும். 'ஒன்றாக வாழும் மூன்று மைத்துனிகளை (ஈராக்கில் உயிரிழந்த மூன்று சகோதரர்களின் மனைவியர்) சமீபத்தில் நான் சந்திக்க நேர்ந்தது. ஒருவர் மாறி ஒருவராக அவர்கள் இரவில் 'தொழிலுக்கு' செல்கின்றனர். கிடைப்பதை தமக்கிடையில் பகிர்ந்து கொண்டு தமது குழந்தைகளை வளர்க்கின்றனர். இவ்வாறு அவர்களின் அவலங்கள் முடிவின்றித் தொடர்கின்றன. அமெரிக்கா ஈராக்கை 2003ல் ஆக்கிரமித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் விபச்சாரம், குறிப்பாக ஈராக்கிய பெண்களை வைத்து நடத்தப்படும் விபச்சாரம் சிரியாவில் இன்னும் 'பேசப்பட முடியாத' விடயமாகவே இருக்கின்றது.

     பின்லாந்தில் விபச்சாரம் தவறான கண்கொண்டு பார்க்கப் படுவதே இல்லை. யேர்மனியில் பல இடங்களில் அங்கீகாரம் பெற்ற விபச்சார விடுதிகள் இருந்தாலும், அங்கீகாரம் பெறாத விபச்சார விடுதிகள் அதை விட அதிகமாய் உள்ளன. பாவனையில் இல்லாத வீடுகள் கூட இதற்குப் பயன் படுத்தப்படுகின்றன.இவைகளில் ஏறக்குறைய 400000 பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பால்வினைத் தொழில் செய்பவர்களில் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். ஒரு வகையினர் தாமாக விரும்பி இத்தொழிலில் ஈடுபடுபவர்கள். இரண்டாவது வகையினர் கட்டாயத்தின் பேரில் ஈடுபடுத்தப் படுபவர்கள்.இந்த முதலாவது வகையினரில் பாடசாலைப் பிள்ளைகளும் பல்கலைக் கழகப் பிள்ளைகளும் அடங்குவர். அம்மா அப்பாவிடமிருந்து கிடைக்கும் பொக்கற் மணி போதாத பட்சத்திலும், படிப்பதற்கான செலவுகளைச் சமாளிக்க முடியாத பட்சத்திலும் - வேறு வேலைகள் செய்வதை விட இந்த வேலையில் சுலபமாகப் பணத்தைச் சம்பாதித்து விடலாம் என்பது இவர்கள் கருத்து. இவர்கள் பெரும்பாலும் வீதிகளின் ஓரங்களில் காத்து நின்று, தம்மை இனம் காட்டுவார்கள். இவர்களில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அதை விட வசதியான வாழ்க்கைக்காக பாடசாலை விடுமுறைக்கு உல்லாசப் பயணிகள் நிறைந்த பணக்கார நாடான சைப்பிரசுக்குச் சென்று பால்வினைத்தொழில் செய்து சம்பாதித்து வருவார்கள். இரண்டாவது வகையினர் கூடுதலாக போலந்து, செக்கொஸ்லொவோக்கியா, உக்ரையின் போன்ற நாடுகளிலிருந்து தரகர்களால் கடத்திக் கொண்டு வரப்பட்டு கட்டாயப் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். இப்படித் தாம் விரும்பி இத்தொழிலில் ஈடுபடும் கிழக்கு ஐரோப்பியப் பெண்கள் 30 வீதமானவர்கள் மட்டுமே! மிகுதி 70 வீதமான கிழக்கு ஐரோப்பியப் பெண்களும் ஏஜென்சிமார்களால் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டு விபச்சார விடுதி நடத்துனர்களாலும், இரண்டாவது தரகர்களாலும் கட்டாய பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது யேர்மனிய அரச நிறுவனங்களால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த இரண்டாவது வகைப் பால்வினைத்தொழில் செய்யும் பெண்களில் தாய்லாந், பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாட்டுப் பெண்களும் அடங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய ஆண்களால் ஏமாற்றப் பட்டே இங்கு அழைத்து வரப் படுகிறார்கள். ஐரோப்பிய ஆண்கள் இந்தக் கொடுமையைச் செய்வதற்கென்றே உல்லாசப் பயணிகளாக தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளுக்குப் போகிறார்கள். அங்கு வறிய அழகிய பெண்கள் மேல் காதல் கொண்டது போல நடித்து, திருமணம் செய்வதாகப் பொய் சொல்லி இங்கு கூட்டி வந்து பால்வினைத் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்துகிறார்கள். இந்த ஆண்களில் பெண்களை இங்கு கொண்டு வந்து விற்பவர்களும் இருக்கிறார்கள். சொந்தமாகவே விபச்சாரவிடுதி வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். அதை விட பெண்களை ஏமாற்ற முடியாத பட்சத்தில் கடத்தியும் கொண்டு வருகிறார்கள். கடத்தலுக்கு இடைத்தரகராக நின்று உதவி செய்பவர்கள் பெரும்பாலும் தாய்லாந்து பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்களாகவே இருக்கிறார்கள்.

     சீனாவைச் சேர்ந்த ஒரு விலைமாது சொல்கிறார். "நான் எனக்குப் 17 வயதாக இருந்த போது எனது ஒன்று விட்ட சகோதரியுடன், வேலை எடுத்துத் தருவதாகச் சொன்ன ஒரு உறவு மாமாவுடன் பஸ் ஏறினேன். நான்கு மணிநேர  பயணம் என்றார் மாமா. ஆனால் நான்கு நாட்கள் காடுகள் மேடுகள் கடந்த பயணம் அது. அது கடத்தல் என்று தெரிய முன்னமே பயத்தில் வீடு திரும்ப மன்றாடினேன். மாமா விடவில்லை. பர்மா எல்லையில் நாமிருவரும் விலைபேசப் பட்டோம். அவர்கள் எம்மை ஒரு சட்டைத்துணி போல, ஒரு ரவிக்கை போல ஆராய்ந்து பார்த்தார்கள். கன்னி கழியாமல் இருக்கிறோமா என்பதைக் கூட கவனமாக ஆராயந்தார்கள். இப்போ நான் இந்த வாழ்வில் இருந்து மீளமுடியாதவளாகி விட்டேன். " என்று.

     2002 மாசி பிற்பகுதியில் பேர்லினில் அங்கீகாரம் பெற்ற ஒரு விபச்சாரவிடுதியில் ஏறக்குறைய 1000 வெளிநாட்டுப் பெண்கள் பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பதும், அவர்களால் அவர்களை வாடிக்கையாளர்களிடம் வாடகைக்கு விடும் தலைமைத் தரகர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெண்கள் பாதிக்கப் பட்டவர்களாகவே கண்டு கொள்ளப்பட்டார்கள்.சிலபெண்கள்  இவர்களைப் பெண்கள் என்று சொல்வதை விட சிறுமிகள் குழந்தைகள் என்று கூடச் சொல்லலாம். அவ்வளவு இளம் வாலிப வயதுப்பெண்கள் இவர்கள். தரகர்களிடம் முரண்படும் சமயங்களில் தரகர்களால் அடித்துத் துன்புறுத்தப் படுகிறார்கள்.பேர்லினில் இந்த வருட பெப்பரவரி மாத இறுதியில் ஒரு ரஷ்ய இளநங்கை மிகவும் கொடுமைப் படுத்தப் பட்ட நிலையில் பொலீசாரால் விடுவிக்கப் பட்டிருக்கிறாள். இவளை 3 ரஷ்யர்கள் 8மணி நேரமாகத் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். அந்த ரஷ்யர்களில் ஒருவருக்கு அன்று பிறந்தநாளாம். அதைக் கொண்டாடு முகமாகவே அந்த இளநங்கை சித்திரவதை செய்யப் பட்டிருக்கிறாள். வல்லமையை நிரூபிப்பதற்காக ஏற்பட்ட போரில் வாழ்க்கையை இழந்த ஏராளமான இளம் பெண்களும் விதவைகளும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் படை வீரர்களிடம் சில ரொட்டித் துண்டுகளுக்காக தன் கற்பை விலை பேசிய அவலத்தையும் வேதாந்தம் பேசும் இவ்வுலகம் வேடிக்கை பார்க்கத்தான் செய்தது.  

     UNHCR சொல்கிறது. "ஆபிரிக்காவில் மிகவும் பாதிக்கப் படுபவர்கள் குழந்தைகளே. இவர்களில் 18 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் முதலில் இராணுவத்தாலும் பின்னர் உதவி நிறுவனங்களில் வேலை செய்பவர்களாலும் பாலியல் துர்ப்பிரயோகத்துக்கோ அல்லது பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்தப்படுகிறார்கள். அதன் பின்னர் உணவு உடை மருந்து பாடசாலை போன்றவற்றுக்காக பாலுறவுக்கு வற்புறுத்தப் படுகிறார்கள். அதன் பின் விலைமாதர்களாக்கப் படுகிறார்கள்." என்று பால்வினை என்னும்பாழ் கிணற்றுக்குள் வாழ்விழந்த பெண்கள் மீள வழி உண்டா.........!ஏழ்மையினாலும் சில மனிதர்களின் இச்சையினாலும் சூழ உள்ளவர்களின் சூழ்ச்சியினாலும் ஊனமானது உடல்கள் மட்டுமல்ல!இவர்கள் உள்ளங்களும்தான்!

 தீர்வு: மேலும் இன்றைய நிலையில் அலுவலகங்களுக்கு பணிபுரியச் செல்லும் பெண்கள் ஆண் வர்க்க மேலதிகாரிகளால் பாலியல் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். கல்வியை கற்றுத் தர வேண்டிய ஆசிரியர்களே காமக் கொடூரன்களாக மாறி மாணவிகளைக் கற்பழிப்பது இன்றகை;கு தினசரி செய்தியாகி விட்டது. ஈவ்டீசிங் வழக்குகள் ஆயிரக்கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன. கற்பழிப்புக் கொலைகள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் சற்று நடுநிலையோடு சிந்தித்துப் பார்க்கும் போது உண்மைகள் நமக்குப் புலப்படும்.ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கலந்துறவாடுவது தனிமையில் சந்தித்துப் பேசுவது பெண்கள் தங்கள் அழகு அலங்காரங்களை வெளிக்காட்டிக் கொண்டு செல்வது இவை தான் பெண்களுக்கே எதிரியாகவும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு காரணமாகவும் பல தவறுகளுக்கு அடிப்படையாகவும் திகழ்கின்றது.  ஆணுக்கு காம இச்சைத்தூண்டுதல்கள் அவன் பெண்ணைப் பார்க்கும் பார்வையிலேயே ஆரம்பமாகி விடுகின்றது. ஆனால் பெண்ணுக்கோ அவளைத் தொடும் பொழுது தான் காம இச்சை உடலிலே தூண்டப்படுகின்றது.பெண் கவர்ச்சியானவள். கவர்ச்சியாக அவள் உடை அணிந்து செல்லும் பொழுது அவளது அங்கங்களைப் பார்க்கும் ஆடவனுக்கு காம இச்சை தூண்டப்படுகின்றது. சமூகக் குற்றம் அவனது பார்வையிலிருந்து ஆரம்பமாகின்றது. அந்தக் குற்றம் நிகழ அவள் உடுத்தும் உடையழகு காரணமாகி விடுகின்றது. எனவே அந்த பெண்மையின் அழகை மென்மையை மூடி மறைத்துக் கொள்ளுங்கள் என இஸ்லாம் கூறி ஆணையும் பெண்ணையும் சமூகக் குற்றத்தில் ஈடுபடாமல் பாதுகாக்கின்றது. காரணம்..! இந்தப் பூமி சமூகக் குற்றங்கள் இல்லாத அமைதியான பிரதேசமாக இருக்க வேண்டும் என்பதே அல்லாமல் அவளை மூடி மறைத்து வீட்டில் முடக்கிப் போட வேண்டும் என்பதனால் அல்ல என்பதை சகோதரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவு என்பது கண்ணுக்கும் புலனுக்கும் எட்டுவது மட்டுமல்;ல அதற்கு அப்பாலும் உண்டு என்பதையும் உணர்ந்து செயல்படுவது நன்று.ஆண்களும் பெண்களும் கலந்து விடுவதை நபி (ஸல்) அவர்க்ள கண்டிப்பாகத் தடை செய்துள்ளார்கள். இன்னும் அப்படி கலந்து விடுவதற்குக் காரணமான அனைத்தையும் வணக்க வழிபாடுகள் நடைபெறும் இடங்களிலும் கூட தடுத்துள்ளார்கள்.     

     அல்லாஹ் திருமறையில் விபச்சாரம் குறித்து இவ்வாறு சொல்கிறான 'நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் நிச்சயமாக அது மானக்கேடானதாகும் மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது (அல்குர்ஆன் 17:32) இங்கே அல்லாஹ் பயன்படுத்தி இருக்கும் வார்த்தையின் ஆழத்தை புரிந்து கொள்வது அவசியமாகும். 'விபச்சாரத்தை நெருங்காதீர்கள் என்பது 'விபச்சாரத்தை செய்யாதீர்கள் என்று சொல்வதை விட எந்த அளவுக்கு கவனமான வார்த்தைப் பிரயோகம் என்பதை புரிந்து கொள்ளலாம். 'விபச்சாரத்தை செய்யாதீர்கள் என்பது அந்தச் செயலை செய்வதை மட்டுமே தடுக்கும். ஆனால் விபச்சாரத்திற்கு முந்திய செயல்களை அவை தடுக்காது. பார்ப்பது பேசுவது நடப்பது பிடிப்பது இதுபோன்ற அதை நெருங்குவதற்குரிய காரியங்களும் உள்ளன. இவற்றுக்கு தடை விதித்தால் தான் விபச்சாரம் என்ற குற்றத்திலிருந்து தப்ப முடியும். அதனால் தான் விபச்சாரத்தை நெருங்காதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.விபச்சார குற்றம் எந்த அளவுக்கு பாரதூரமானது என்பதை அதற்கு தரப்படும் தண்டனையை வைத்து விளங்கிக் கொள்ளலாம். ஒரு இஸ்லாமிய ஆட்சியில் ஒரு இஸ்லாமிய ஆட்சியாளன் இந்த தண்டனையை நிறைவேற்றுவது அவன் மீது கடமையாகும். அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்.விபச்சாரியும் விபச்சாரனும் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம் இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும் (அல்குர்ஆன் 24:2)

     திருமணம் ஆகாதவர் விபச்சாரம் செய்தால் அவருக்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும் என்பது இறைக்கட்டளை. தற்காலத்தில் ஆபாசத்தினுடைய அனைத்து வாயில்களும் திறக்கப்பட்டு விட்டன. அதற்கான வழியை ஷைத்தான் தன்னுடைய சூழ்ச்சியாலும் தன் நண்பர்களுடைய சூழ்ச்சியாலும் எளிதாக்கி விட்டான். பாவிகளும் தீயவர்களும் அவனைப் பின்பற்றலானார்கள். அதனால் பெண்கள் தங்கள் அழகு அலங்காரங்களை வெளிக்காட்டுவது அதிகமாகி விட்டது. ஆபாசங்களும் அந்நியப் பெண்களைப் பார்த்தலும் ஆண்களும் பெண்களும் இரண்டறக் கலந்து விடுதலும் பரவலாகி விட்டன. மஞ்சள் பத்திரிக்கைகளும் நீலப்படங்களும் பரவி விட்டன. தீமைகள் நிறைந்த கட்டுப்பாடற்ற நாடுகளுக்கு பயணமாவது அதிகரித்து விட்டது. விபச்சார விடுதிகளும் பாலியல் பலாத்காரங்களும் கற்பழிப்புகளும் பெருகி விட்டன. கருக்கலைப்புகளும் தவறான வழியில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டன.இறைவா! உனது அருளையும் அன்பையும் மன்னிப்பையும் உன் புறத்திலிருந்து பாதுகாப்பையும் உன்னிடம் வேண்டுகிறோம். அதன் மூலம் ஆபாசங்கள் மற்றும் மானக்கேடானவற்றை விட்டும் எங்களைப் பாதுகாப்பாயாக! மேலும் எங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி எங்கள் கற்புகளைக் காத்திடவும் விலக்கப் பட்டவைகளுக்கும் எங்களுக்கும் மத்தியில் ஒரு திரையை ஏற்படுத்தவும் வேண்டுகிறோம்.